இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ‘வந்தேபாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியரை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே-25 முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்க்கப்பட்டது. இதையடுத்து 3 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட, சர்வதேச விமான போக்குவரத்து இன்று தொடங்க உள்ளது.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள்

Flight list

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இடையேயான விமான சேவையை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 17-31 வரை, அமெரிக்காவிற்கு, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், 18 விமான சேவைகளை மேற்கொள்ள உள்ளது. டெல்லி – நியூயார்க் இடையே, தினசரி சேவையும், டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே, வாரம் 3 முறையும் விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படும். ஏர் பிரான்ஸ் நிறுவனம், இம்மாதம் 18 முதல் ஆக.,1 வரை, 28 விமான சேவைகளை வழங்க உள்ளது. இவை டெல்லி, மும்பை, பெங்களுரூவில் இருந்து, பாரிஸ் நகருக்கு இயக்கப்படும்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள்

Flight list

இதே போல், பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜெர்மனிக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவை வழங்க உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பல நாடுகள், விமான சேவைக்கு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனால், கொரோனா பிரச்சுனை காரணமாக, பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, படிப்படியாக விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளோம். உள்நாட்டு விமான சேவையில், தற்போது பயணியர் எண்ணிக்கை, 33 சதவீதத்தில் இருந்து,45 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இது, வரும் தீபாவளிக்குள், 60 சதவீத அளவிற்கு உயர்த்தப்படும்” என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

Facebook: https://www.facebook.com/tamilmicsetusa
Twitter: https://twitter.com/tamilmicsetusa