அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது!

coronavirus

புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

coronavirus

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த 10 நாட்களாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக கலிப்போர்னியா, புளோரிடாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனிடையே பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஜோபைடன், கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியி போட்டுக்கொண்டனர்.

இதையும் படிக்கலாமே:ஒரே நாளில் 3,927 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter