கொரொனா பரிசோதனையில் இரண்டாமிடத்தில் இந்தியா – வெள்ளை மாளிகை

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் 29 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 36லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,41,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

Covid test

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களுகு பேட்டி அளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மெக்கனி, அமெரிக்காவில் இதுவரை 4.20 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

Facebook: https://www.facebook.com/tamilmicsetusa
Twitter: https://twitter.com/tamilmicsetusa