நான் வெற்றி பெற்றால் எச் 1பி விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் நீங்கும் – ஜோ பிடன்

Joe biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் எச் 1பி விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் நீங்கும் என ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

trump vs joe biden

ஆனால் அமெரிக்க இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப்போகிறார்களா? அல்லது அதிபர் ட்ரம்பிற்கே மீண்டும் வாக்களிக்கப்போகிறார்களா? என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனக்கூறப்படும் நிலையில் அதிபர் ட்ரம்பும், ஜோ பிடனும் இந்தியர்களின் வாக்கை குறி வைத்தே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜோ பிடன், தான் அதிபரானால் பின் எச்1பி விசா குறித்த இந்தியர்களின் கவலை நீக்கப்படும் என தெரிவித்தார். இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என குறிப்பிட்ட அவர், அதனாலேயே இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரை தான் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: தேர்தலில் தோல்வியடைந்தாலும் பதவி விலக மாட்டேன் – ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa