சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி

Covid-19 vaccine

உலகிலேயே முதல் நாடாக 12 முதல் 15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

White House

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் இதனை தொடர்ந்து மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 12 முதல் 15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மே 13ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.