கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

Remdesivir

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க அம்மாநில உணவு மற்றும் மருந்துக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு 84 லட்சத்து 60 ஆயிரத்தும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

Remdesivir gets FDA nod

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தையே அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்திவந்தது.

கடந்த மே மாதம் ரெம்டிசிவிர் மருந்துக்கு அம்மாநில சுகாதாரத்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க அம்மாநில உணவு மற்றும் மருந்துக் கழகம் முழு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக ரெம்டிசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு எந்தவித பலனும் அளிக்கவில்லை என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்திருந்தது.

இதையும் படிக்கலாமே:  இந்தியாவை பாருங்கள்… எவ்வளவு அசுத்தமாக உள்ளது: ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter