அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இருப்பினும் இரு தலைவர்களும் பரஸ்பரம் விமர்சிப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதுமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் ஜோ பிடனுக்கு 49.6 சதவிகிதம் பேரும், ட்ரம்புக்கு 42.1 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்த்து இவரை தோற்கடியுங்கள் என சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பர்க் கடந்த வாரம் காலமாகியிருந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ட்ரம்ப் வந்திருந்தார்.
துக்க நிகழ்ச்சி என்பதால் கறுப்பு நிற முகக் கவசம் அணிந்து மனைவி மெலனியாவுடன் ட்ரம்ப் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் ட்ரம்ப்பை பார்த்து இவரை தேர்தலில் தோற்கடியுங்கள் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்கலாமே: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தயாரிக்கும் கொரோனா மருந்து!
FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa
FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter
– https://twitter.com/tamilmicsetusa