அதிபர் பதவியை விடமாட்டேன்- ட்ரம்ப் பிடிவாதம்

Donald Trump

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

தேர்தல் முடிந்து ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருந்துவருகிறார்.

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

எலக்டோரல் காலேஜ்ஜும் பைடனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், ட்ரம்பிடம் இருக்கும் அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

trump- biden

இந்நிலையில் ஜார்ஜியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “அதிபர் பதவியை விடமாட்டேன். கடைசி வரை அனைத்து வகையிலும் போராடுவேன். அதிபர் தேர்தல் முடிவுகளை என்னால் ஏற்க முடியாது. எலக்டோரல் காலேஜ் வாக்களித்து விட்டால், பைடன் வென்றதாக ஆகிவிடுமா? நான் பைடனை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடமாட்டேன்” என தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பைடன், “அதிபர் பதவியில் இருந்து விலகுபவர், கடைசி நாள் வரை, தங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, தேவையில்லாத செயல்களில் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். பதவியில் இருக்கும்போது தன்னுடைய பணியை ஒழுங்காக செய்யாதவர், எதற்கு அந்தப் பதவியை கேட்கிறார் என்பது தெரியவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவிலுள்ள போஸ்ட் ஆபிஸ்க்கு சூட்டப்படும் இந்தியர் பெயர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter