அமெரிக்காவில் குறைந்த கொரோனா பாதிப்பு விகிதம்!

coronavirus

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 30 பேருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

43 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் ஜனவரியை விட 80 சதவீதம் குறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருகின்றன.