வங்கி ஒன்றின் கவனக்குறைவால் வாடிக்கையாளரின் கணக்கில் 50 பில்லியன் டாலர் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானாவில் டேரன் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். பேடன் ரோக் (Baton Rogue) என்ற ஊரில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருப்பவர் டேரன் ஜேம்ஸ். இவரது மனைவியின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக எஸ்.எம்.எஸ் ஒன்று வந்தது.
மெசேஜை பார்த்து அதிர்ந்து போன டேரன் ஜேம்ஸின் மனைவி, ஆத்தாடி இத்தனை சைபர் போட்டுருக்கே , என்ன இது என அதிர்ந்து போனார். மெல்ல மெல்ல ஆச்சர்யத்தில் இருந்து மீண்ட அவர் தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் செய்யப்பட்டதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து இந்த தகவலை கணவருக்கு தெரியப்படுத்த, இதுகுறித்தான தகவலை வங்கிக்கு தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் பேசிய பின்னர் தான், பணம் தவறாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வங்கி உணர்ந்தது. ஆனால், பணம் எங்கிருந்து வந்தது அல்லது யாரால் டெபாசிட் செய்யப்பட்டது என்கிற எந்த தகவலையும் வங்கி வெளிப்படுத்தவில்லை.
இந்தத் தவறு தெரிந்தவுடனேயே, வங்கி அதிகாரிகள் பரிவர்த்தனையை மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.