கொரோனா பரவலைத் தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என முன்னாள் அதிபர் ஒபாமா தனது பிரச்சாரத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.
கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதேபோல் ஜோ பிடனுக்காக ஒபாமா வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வெற்றிக்கு முக்கிய மாநிலமாக பார்க்கப்படும் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்ட ஒபாமா, அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பரப்புரை பேரணியில் உரையாற்றிய ஒபாமா, “8 மாதங்களாக நமது நாட்டில் கொரோனா தொற்று உள்ளது. பரவலை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார்.
தொற்றிலிருந்து மக்களை காக்க ட்ரம்ப் முதல் படியைக் கூட எந்த வேலை செய்வதிலும் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை. ட்ரம்ப்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிக்கலாமே: துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…