உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் மனித குரங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமைந்திருக்கும் விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் 9 மனித குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அதில் 4 ஓரங்குட்டான் இன குரங்குகள், மீதமுள்ள 5 போனோபோ இன குரங்குகளாகும். அனைத்து மனித குரங்குகளுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஊழியர்களிடமிருந்து 8 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் அங்கிருக்கும் கொரில்லாக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
கால்நடை மருந்து நிறுவனம் உயிரினங்களுக்காக இந்த பிரத்யேக கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசி முன்னதாக பூனைகள் மற்றும் நாய்கள் மீது செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
சான் டியாகோ நகரிலுள்ள சபாரி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு கொரில்லாக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் கடுமையான இருமல் மற்றும் சளி இருந்தது.
இதனால் கால்நடை மருத்துவர்கள் அதற்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டனர் மனிதர்களுக்கு நடக்கும் பரிசோதனை போன்று அல்லாது பூங்கா அதிகாரிகள் அவற்றின் மலக்கழிவுகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அவற்றின் முடிவுகள் வெளிவந்தன. அதில் அவை இரண்டுக்கும் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக இரண்டு கொரில்லாக்களையும் தனிமைப்படுத்தியுள்ள பூங்கா நிர்வாகம், கவனமாக பாதுகாத்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…