அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனையை நிறைவேற்ற புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1953 ஆம் ஆண்டு தான் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அங்கு யாருக்குமே அதுபோன்று ஒரு கொடூர தண்டனை விதிக்கப்பட்டவில்லை.
இதனை தொடர்ந்து ட்ரம்ப் தலைமையிலான மரண தண்டனையை விஷ ஊசிகளின் மூலம் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது விஷ ஊசிகளின் தட்டுப்பாடு காரணமாக தென் கரோலினா மாகாண நிர்வாகம் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி மின்சார இருக்கையில் குற்றவாளியை அமர வைத்து துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய சட்டத்துக்கு 66 வாக்குகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் இன்னமும் மரணதண்டனையை நிறைவேற்ற மின்சார இருக்கைகளை பயன்படுத்திவரும் 9 மாகாணங்களில் தென் கரோலினாவும் ஒன்று.
இந்நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்றும் நான்காவது மாகாணமாக மாறியுள்ளது தென் கரோலினா.
தென் கரோலினா மாகாணத்தை பொருத்தமட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கடைசியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விஷ ஊசிகளின் தட்டுப்பாடு காரணமாக சிறைகளில் மரணதண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அதேபோல் 1912 ஆம் ஆண்டு முதல் தென் கரோலினா மாகாணம் மரணதண்டனை நிறைவேற்ற மின்சார இருக்கைகளையே பயன்படுத்தி வருகிறது. அதற்கு முன்னர் வரை தென் கரோலினா, தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளனர்.
தற்போது மிசிசிப்பி, ஓக்லஹோமா மற்றும் உட்டா உள்ளிட்ட மாகாணங்கள் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.