அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன் இந்திய வம்சாவளியினர் போராட்டம்!

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன் இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. வைரஸ் தாக்குதலால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா கடுங்கோபத்தில் உள்ளது. மேலும், தென் சீன கடலோரப் பகுதியில் உள்ள வளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுவருகிறது. அதனை தடுக்க தென் சீன கடல் பரப்பில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவையும் இந்தியா சீண்டிவருகிறது.

Protest

இதனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கு தொடர்ந்து பல பிரச்னைகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் சீன அரசை கண்டித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா வைரஸ், அமெரிக்காவுடனான வர்த்தகபோர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa