இந்திய பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற கோல்கொண்டா கோட்டையை இவாங்கா பார்வையிட்டார். தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட 350 பேர் பங்கெற்றனர்.
இதே மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் எடுத்த புகைப்படங்களை மூன்று வருடம் கழித்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இவாங்கா.
View this post on Instagram
புகைப்படங்களுடன் ஒரு பதிவு ஒன்றையும் இவாங்கா ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதில், “3 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தியாவில் நடைபெற்ற உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அன்பான நினைவுகள்.
கொரோனா தொற்றுடன் உலகம் போராடிவரும் இந்த சூழலில், உலகளாவிய பாதுகாப்பு, மற்றும் பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதில் நமது இரு நாடுகளும் வலுவான நட்பை முன்னெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் ஒரு சில நாட்களில் தனது தந்தை அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேற உள்ள நிலையில் இவாங்கா ட்ரம்ப் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்கலாமே: ஜோ பைடனுக்கு காலில் காயம்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…