அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையை மர்மநபர்கள் உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் West Kendall- நகரில் இருக்கும் குட் ஷெப்பேர் தேவாலாயத்திற்கு வெளியே இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. தேவாலய ஊழியர்கள் சம்பவதினத்தன்று காலை 8 மணிக்கு வந்து பார்த்தபோது சிலை உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்திருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தேவாலயத்தின் மீதான தாக்குதல், இது தனியார் சொத்து மட்டுமல்ல, இது புனிதமான சொத்து என்றும், திருச்சபை சமூகத்தை இந்த சம்பவம் வருத்தப்படுத்தியுள்ளதாகவும் மியாமி மறைமாவட்ட செய்தித்தொடர்பாளர் மேரி ரோஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவாலயத்தில் பாதுகாப்பு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேவாலயத்திலிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa