பிடனுக்கான இந்து அமெரிக்கர்கள்! வாக்குகளை கவர புதிய உத்தி

joe biden

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

Joe biden

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள்.

இவர்களின் வாக்குகளை கவர குடியரசு மற்றும் ஜனநாய கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் ஆதரவாளர்கள், ‘ட்ரம்புக்கு ஆதரவாக இந்துக்களின் குரல்கள்’ என்ற பிரசாரத்தை தொடங்கினர்.

இதற்கு போட்டியாக பிடனின் ஆதரவாளர்கள் தற்போது ‘பிடனுக்கான இந்து அமெரிக்கர்கள்’ என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இதன் முதல் கூட்டம், இன்று நடைபெறவுள்ளது. இதில், இந்திய வம்சாவளியான இலினாய்சை சேர்ந்த எம்.பி., ராஜா கிருஷ்ண மூர்த்தி பேசுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இந்துக்களுக்காக தனி பிரசாரம், நடப்பது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிக்கலாமே: ‘தி கிளீன் நெட்வொர்க்’ திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa