அம்பலமாகும் அதிபர் ட்ரம்பின் குடும்ப ரகசியம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகளான மேரி ட்ரம்ப் எழுதிய ‘டெல் ஆல்’ புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நியூயார்க் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தந்தை ஃப்ரெட் ட்ரம்பின் எஸ்டேட் சொத்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப், அவரது சகோதரர் ராபர்ட் ட்ரம்ப், மேரி ட்ரம்பின் தந்தை ஃப்ரெட் ட்ரம்ப் ஜேஆர் ஆகியோருக்கு இடையே 2001ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் சாரம்சமே. சில குடும்ப ரகசியங்களை வெளியிடக்கூடாது என்பதுதான். அதற்கு அனைவருமே சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேரி ட்ரம்ப் எழுதிய ‘டெல் ஆல்’ புத்தகத்தில் குடும்ப ரகசியங்களை கூறியிருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ராபர்ட் ட்ரம்ப் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது 2001ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தில், புத்தக வெளியீட்டு நிறுவனமான சைமன் & ஷுஸ்டர் ஒப்பந்ததாரராக இல்லை எனக்கூறி, புத்தகத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியது. எனினும் ராபர்ட் ட்ரம்ப் கூறியதுபடி, புத்தகத்தில் குடும்ப ரகசிங்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் உறுதியளித்தது.

அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் மேரி ட்ரம்ப் எழுதியிருக்கிறார் என ஆராய்ந்தால் அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது தனது தாத்தா குடும்பத்தில் நடந்த சவால்களும், சறுக்கல்களும், இன்னல்களும் மேரி ட்ரம்பால் எழுதப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து 240 பக்கம் கொண்ட டெல் ஆல் புத்தகத்தை வெளியிட சைமன் & ஷுஸ்டர் புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆயத்தமாகிவருகின்றனர்.