மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

Vaccine

கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.

corona vaccine

இந்த வார தொடக்கத்தில் இருந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மற்றொரு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவிலுள்ள 30,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படது. அதில் இந்த தடுப்பூசி 94% பலன் அளிப்பதாக அமெரிக்க மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்த  தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மற்றும் பைபர் நிறுவனத்திடம் அமெரிக்கா 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் தடுப்பூசி இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

இதையும் படிக்கலாமே: பைடனின் வெற்றியை உறுதி செய்த தேர்வாளர்கள் குழு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter