அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 18% பேருக்கு தடுப்பூசி!

vaccine

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

One Dose Vaccine

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

தான் பதவியேற்ற 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபா் ஜோ பைடன் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, அமெரிக்காவில், 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி கொண்டதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 30.1 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட 63.5 சதவீதம் பேர் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுவிட்டனர்.

65 வயதுக்கு மேற்பட்ட 86.3 சதவீதம் பேர் முதல் டோஸையும் 75.5 சதவீதம் பேர் இரண்டாம் டோஸையும் போட்டுக்கொண்டுள்ளனர்.