அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியாகும் இந்திய வம்சாவளி

Vivek Moorthy

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr vivek moorthy part of covid task force in america

இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது விவேக் மூர்த்தி தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்து அதிபரான ட்ரம்ப் விவேக் மூர்த்தியை அப்பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

பைடன் அடுத்த மாதம் அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் தலைமை மருத்துவ அதிகாரியாக விவேக் மூர்த்தியை தேர்வு செய்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளவிருக்கும் 3 முன்னாள் அதிபர்கள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter