அமெரிக்காவின் அதிபராக இருந்த 4 ஆண்டுகளில் மட்டும் டொனால்ட் ட்ரம்ப் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது,
குடிமக்களுக்கான பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் அமைப்பானது ட்ரம்ப் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொண்டது.
அந்த விசாரணையின் முடிவில் ட்ரம்ப் குறித்த நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ட்ரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளில் இருந்து 2016 முதல் 2020 வரை ட்ரம்புக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் வாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்
இதுமட்டுமின்றி, அதிபராக இருந்த காலக்கட்டத்தில் ட்ரம்ப் தனது ஊதியம் மொத்தத்தையும் பல்வேறு அறாக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டாரம்.
இதிலிருந்து ட்ரம்புக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை என்பது தெரிகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி பொருளாதார அளவில் அதளபாதாளத்திற்கு சென்றாலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் ட்ரம்ப் குழுமத்தில் நிறைய வருவாய் கிடைத்துள்ளது.
ட்ரம்ப் மட்டுமின்றி, அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அவரது மகள் இவாங்கா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளில் 46 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர்.
அதிபர் பதவிக்காக ஏராளமான கோடி ரூபாயையும் அதிபர் தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளார்.
தேர்தல் தோல்வியை ஏற்க மறுக்காத ட்ரம்ப் தனது சொந்த நிதியிலே நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்தார்.
ட்ரம்ப்புக்கு பதவியே முக்கியமே தவிர பணம் முக்கியமல்ல. அதனால்தான் கடைசிவரை பதவிக்காக ட்ரம்ப் போராடிவந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த தகவல் அறிந்த பின்னர் ட்ரம்ப் இவ்வளவு நல்லவரா என சிந்திக்கவைக்கிறது.