சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார்.
ஜனநாயக கட்சி சார்பில்முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஈடுபட்டுவருவதாகவும் வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டியிருந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது கொரோனாவை அலட்சியமாகக் கையாண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
ஆனால், இதனையெல்லாம் பற்றி கவலைப்படாத ட்ரம்ப், ஜோ பைடனை சீன ஆதரவாளர் என்றும், கமலா ஹாரீஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் விமர்சித்து வாக்கு சேகரித்துவருகிறார்.
மேலும், ஜோ பைடனுக்கு அமெரிக்கர்கள் அளிக்கும் வாக்குகள் சீனாவுக்கு அளிப்பதற்கு சமம் என்று ட்ரம்ப் தனது பிரசாரத்தில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு சீனாவில் வங்கி கணக்கு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டொனால்டு ட்ரம்ப்க்குச் சொந்தமான ஓட்டல் நிர்வாகத்தால் மூன்று ஆண்டுகளுக்கு வரி செலுத்தியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அதிபர் ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர், 2013-2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே சீனாவிலுள்ள வர்த்தகத்திற்கு வரி செலுத்தியிருப்பதாகவும், ட்ரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் சீனாவுடன் எந்த வர்த்தக உறவிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடனும் சீனாவில் தொழில் செய்துவருவதாகவும், அதற்கான ஆதாரத்தை ஹண்டர் பிடனுன் மெயிலிருந்து எடுத்து ஆதாரம் வைத்திருப்பதாகவும் ட்ரம்ப் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க வாழ் இந்துக்களின் வாக்கு யாருக்கு என காணொலி மூலம் விவாதம்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…