மேலும் ஒரு கருப்பினரை கொன்ற அமெரிக்க போலீசார்

Protest

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

இதேபோல் கடந்த மாதம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கெனோஷா நகரில் ஜேகப் பிளேக் என்ற கருப்பின இளைஞர் மீது காவல்துறையினர் 7 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம் லுாசியானா மாகாணத்தில் உள்ள, லபாயெட் நகரை சேர்ந்த மற்றொரு கருப்பின இளைஞர் ட்ரேபோர்டு பெல்லரின் என்பவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் தீவிரமடைந்தது.

Police attack

இப்படி கருப்பினர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும் வரும் சூழ்நிலையில், ரோசெஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த டேனியல் ப்ரூட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஏழு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் போலீசாரின் செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேனியல் ப்ரூட் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் இரவு நேரத்தில் ஆடை இல்லாமல் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் டேனியலில் தலையில் ஒரு துணியை போட்டு மூடி குப்புறப் படுக்க வைத்துள்ளனர். இதில் அவர் மூச்சுத் திணறி மரணம் அடைந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பிடனுக்கான இந்து அமெரிக்கர்கள்! வாக்குகளை கவர புதிய உத்தி

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa