ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த அதிபர் ட்ரம்ப்…

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் ஏற்புரை ஆற்றி கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை முன்பு ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டு விசில் அடித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். ட்ரம்பின் உரை நேரலையை இடையூறு செய்யும் வகையில் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிக்கேட்டும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் தனது தேர்தல் உரையின்போது இடையூறு ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த ட்ரம்ப், “இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜார்ஜ் பிளாய்ட் யாரென்றே தெரியாது. யாரானெ தெரியாதவருக்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வேலை இல்லாததால் அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்பின் ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேவை: மைக் பென்ஸ்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa