பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

கொரோனா, பருவநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றார்.

270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

Biden- Modi

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி அவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும் பிரதம்ர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க உறவுக்கு பெரும் பாலமாக இருக்கும் இந்திய அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸின் வெற்றி மிக பெரிய பெருமையும், ஊக்கமுமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு பைடன் நன்றி தெரிவித்தார். கோவிட் உள்ளிட்ட விவகாரங்களுடன் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் தற்போது அதிபராக முடியுமா? அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter