அமெரிக்காவில் புயலில் சிக்கி வணிக கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர்.
லூசியானா அருகே வணிக கப்பல் ஒன்று திடீரென வீசிய புயலில் சிக்கி கவிழ்ந்தது.
விபத்து நடந்த அரைமணி நேரத்தில் நிகழ்விடத்திற்கு சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர், கப்பலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடலில் சிப்பாய்கள் உள்ளிட்ட 12 பேர் மூழ்கினர், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
கப்பல் கவிழ்ந்த இடத்தில் மணிக்கு 80 முதல் 90 மைல் வேகத்தில் காற்றுவீசுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கடலோர காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கப்பல் கவிழ்ந்தபோது 7 முதல் 9 அடி ஆழத்தில் கப்பல் இருந்ததாக கூறப்படுகிறது.