மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் அமெரிக்கா!

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளது என்றும் இதிலிருந்து மீள நவடிக்கை எடுக்காவிட்டால் நாடு மோசமான சீர்குலைவை சந்திக்கும் என்றும் அந்நாட்டு நிதியமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஜேனட் யெல்லன் எச்சரித்துள்ளார்.

A conversation with Janet Yellen

கொரோனாவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான இச்சூழலில் இருந்து அமெரிக்க மக்களை மீட்பதற்காக முழுமூச்சுடன் பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். சிக்கலான சூழலை சமாளிக்க ஜேனட் யெல்லனை விட அமெரிக்காவில் சிறந்தவர் யாருமில்லை என்று அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ள ஜேனட் யெல்லன் அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாரான வெள்ளை மாளிகை!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter