பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு!

joe biden

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார். தொடர்ந்து அதிபராகவும் பதவியேற்றார்.

இதனிடையே சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவது புவிவெப்பமயமாதல். இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் குறைவதற்காக பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 196 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்த அமெரிக்கா, ட்ரம்புக்கு ஆட்சிக்கு வந்த பின் அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகியது.

Biden

வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தால் நிறைய செலவு ஆவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதனிடையே புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக அறிவித்தார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு நாட்டு தூதர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.