அமெரிக்காவில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியாமிநகரில் கடந்த சனிக்கிழமை கார் ஒன்றிலிருந்து சிறுவன் ஒருவன் வீசி எரியப்பட்டான்.
சிறிது நேரத்திற்கு பின் எழுந்து நடந்துவந்த சிறுவனின் உடலில் காயங்கள் சற்று பலமாக இருந்தன. அந்த சிறுவனை அப்பகுதி வழியே சைக்கிளில் வந்த நபர் பார்த்து பின்னோக்கி வந்தார்.
அதேபோன்று தெருவில் நடந்துவந்த மற்றொருவரும் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்தார். இருவரும் இணைந்து அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராவில், இரத்த காயங்களுடன் இருந்த அந்த சிறுவன், வழிப்போக்கர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சுருண்டு கீழே விழுகிறார்.
அந்த சிறுவன் பெயரை போலீசார் வெளியிடவில்லை. ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
சிறுவனின் பெற்றோர் யார், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான 43 வயதான அலிக்ஸ் சாண்டியஸ்டிபான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூரன் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, முகத்தில் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.