அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்களின் வாக்கு!

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, ஜனநாயக கட்சியை சேர்ந்த தாமஸ் பெரேஷ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

thomas

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி தலைவர் தாமஸ் பெரேஷ்,  “மிச்சிகன் மாகாணத்தில் மட்டும், 1.25 லட்சம் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் வாக்கு அதிபர் தேர்தலில் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த அதிபர் தேர்தலில், இந்த மாகாணத்தில், தங்களின் ஜனநாய கட்சி, 10 ஆயிரத்து, 700 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹிலாரி கிளின்டன் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு, இது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதேபோல், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களிலும் தங்களின் கட்சி தோல்வியடைந்தது. அங்கும் இந்தியா வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை தங்களால் பெறமுடியவில்லை. ஆகவே அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

அமெரிக்க இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப்போகிறார்களா? அல்லது அதிபர் ட்ரம்பிற்கே மீண்டும் வாக்களிக்கப்போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa