செப்டம்பர் மாதம் இந்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தங்களின் விளைப்பொருட்களை விற்பனை செய்ய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடந்த 14 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்திய அரசு அவர்களின் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை.
6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டு வாரமாக அமைதியாக போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சிலரும், அமைதியாகப் போராட இந்திய விவசாயிகளுக்கு உரிமையுண்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு போராட்டக்காரர்களின் போராட்டத்து செவி சாய்க்க வேண்டும் என்றும், அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் ஆளுங்கட்சி எம்பிக்களான டக் லாமால்பா, ஜோஸ் ஹார்டர், டி.ஜே.காக்ஸ், ஆன்டி லீவின் உள்ளிட்டோர் இந்திய விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டக் லாமல்பா, “இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்காவும், அரசின் தவறான சட்டத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றன. போராடும் விவசாயிகளுக்காக எப்போதும் நாங்கள் துணை நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: பேத்தியை பெற்றெடுத்த பாட்டி! 61வயதில் பிரசவம்!!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…