அமெரிக்காவில் மாயமான சிறுமி இரண்டு மணி நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியானா மாகாணத்தில் 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு வயதான கிரேஸ் ரோஸ் என்ற சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அவரது உடல் உயிரற்ற நிலையில் அப்பகுதியில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவரது பெயர் புகைப்படம் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
பிரேத பரிசோதனையில் சிறுமி மூச்சுத்திணறலால் உயிரிழந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரேஸ் எப்போதும் தனது நகைகளை விரும்புவாள், ஆனால் அதனையெல்லாம் போட்டு அழகு பார்ப்பதற்கு முன்பே எங்களைவிட்டு சென்றுவிட்டால் என கிரேஸின் பாட்டி கெல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கூறிய கெல்லி, “நான் எப்போதும் அவளிடம் சொல்வேன், எனது மோதிரங்களை பொருத்தக்கூடிய அளவுக்கு உன் விரல்கள் பெரிதாகும்போது, அதனை உனக்கு தருகிறேன்” எனக் கூறினேன்.
சிறுமியின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.