பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை இன்னும் ஒத்துக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.

Donald Trump

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்த தேர்தல் சபை கூட்டத்திலும் பைடன் அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்நிலையில் ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என்றும், வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறும் நாளையும் நானே முடிவெடுப்பேன் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடனுக்கு அதிபர் ட்ரம்ப், இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவில் புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் இருந்தால் அடு வரலாற்று பிழையாக மாறும் என்றும், புதிய அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளால் ட்ரம்ப் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு அப்போதைய அதிபர் செல்ல வேண்டும் என்பது விதி ஆனால் பைடனின் பதவியேற்பு விழாவுக்கு தான் ஒரு போதும் செல்லப்போவதில்லை என அதிபர் ட்ரம்ப்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மாடர்னா தடுப்பூசிக்கும் அமெரிக்கா அனுமதி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter