3 நாள் கெடு! ஹூஸ்டன் நகரிலுள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவு

ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூடிவிடுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரக வளாகத்தில் சில ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவை அமெரிக்கா பிறப்பித்துள்ளது. இது ஒரு பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை என்று சீனாவில் வெளியாகும் Global Times பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹூ சிஜின் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

china-us

இதுதவிர ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சி, தென் சீன கடல் பிராந்தியத்தில் மேற்கொண்டுவரும் ஆதிக்கம் ஆகியவை தொடர்பாகவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa