2வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு!

us corona

அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Coronavirus
Image: AFP

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

இதுவரை 99 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வைரஸ் பரவல் வேகமாக இருந்து வந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்பு பாதிப்பு வேகம் சற்று குறைந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்தும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

இதுவரை 63 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மிசோரி, ஓக்லஹோமா, இண்டியானா, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் இதுவரை 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 700 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை மருத்துவர்கள் உயர்த்தி காட்டுகின்றனர்- ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter