அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு தனது கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை எழுதிவைத்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டென்னசியை சேர்ந்த தொழிலதிபர் பில் டோரிஸ். 84 வயதான இவருக்கு திருமணமும் ஆகவில்லை.
சொந்தக்காரர் என சொல்லிக்கொள்ளவும் யாரும் இல்லை. இவர் லுலு என்ற நாய் ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்துவந்தார்.
அந்த நாயை ஒரு நிமிடம் கூட அவர் பிரிந்து இருக்க மாட்டாராம். லுலு மீது அதீத அன்பு கொண்ட பில், தனது 36 கோடி ரூபாய் சொத்துக்களை அதன் மீது எழுதிவைத்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு பில், வயது முதிர்வால் உயிரிழந்தார். தான் இறந்தபின்பு தனது லுலு கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தால் தனது சொத்துக்களை அதற்கு கொடுப்பதாக பில், உயிலில் எழுதிவைத்திருக்கிறார்.
லுலுவின் பெயரில் அறக்கட்டளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் லுலுவின் அனைத்து ஆசைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பில்லின் நண்பரான பர்ட்டனுடன் லுலு தற்போது சந்தோஷமாக இருக்கிறது.
இதுகுறித்து பில்லின் நண்பரான மார்த் பர்ட்டன் கூறுகையில், “பில் டோரிஸும் லுலுவும் மிக நெருக்கமானவர்கள்.
36 கோடி ரூபாய் சொத்தை செல்ல நாய் பேரில் எழுதி வைத்தது குறித்து என்ன சொல்வதென தெரியவில்லை. அந்த நாய் மீது பில்லுக்கு அவ்வளவு அன்பு” என்று தெரிவித்துள்ளார்.