பூமியில் ஆய்வு மேகொள்ள ஏலியன்களுடன் இணைந்து அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் தெரிவித்துள்ளார்.
ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்றுக்கிரவாசிகள் நிஜமாகவே இருக்கின்றனவா இல்லையா என்பது நீண்ட காலமாக விவாதப்பொருளாகவே உள்ளது.
இந்நிலையில், ஏலியன்கள் நிஜமாகவே இருப்பதாகவும், அது அதிபர் ட்ரம்புக்கு தெரியும் என்றும் இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்புத்துறை முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசிய ஹைம் எஷெட், “வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான். அவர்களுக்கான கூட்டமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.
வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலும், அமெரிக்காவும் ஏலியன்களுடன் தொடர்பில் உள்ளது.
பூமியில் சோதனை நடத்துவதற்காக ஏலியன்களுடன் அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
இது பூமியை ஏலியன்கள் ஆக்ரமிப்பதற்கான முயற்சி அல்ல. வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட ட்ரம்ப் முயற்சித்தார்,
ஆனால் மக்கள் அதற்கு தயாராக இல்லை. அதன்பின் வெளியில் சொல்ல வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் ட்ரம்ப் அந்த முயற்சியை கைவிட்டார்.
மேலும் தாங்கள் இருப்பதை ரகசியமாக வைத்திருக்கும்படி ட்ரம்பிடம் ஏலியன்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
அமெரிக்க அரசுக்கும், ஏலியன்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்திற்கு சாட்சியாக செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் ரகசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நம்ப முடியவில்லை என்றாலும் இஸ்ரேலை சேர்ந்த மூத்த விஞ்ஞானி கூறுவதால் நம்பிதான் ஆக வேண்டுமென கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
இதையும் படிக்கலாமே: இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு அமெரிக்க எம்பிக்கள் ஆதரவு!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…