நியூஜெர்ஸியில் இந்திய தம்பதி சடலமாக மீட்பு! தவிக்கும் 4 வயது குழந்தை

Indians

அமெரிக்காவில் இந்திய தம்பதியினர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாலாஜி பரத் ருத்ரவார் அமெரிக்காவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் 2014 ஆண்டு ஆரதி என்பவரை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

அவர்கள் நியூஜெர்ஸியில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நான்கு வயது குழந்தை பால்கனியில் நின்று அழுதுக்கொண்டிருந்தது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பாலாஜியின் வீட்டை கதவு திறந்து பார்த்துபோது, கணவனும் மனைவியும் சடலமாக கிடந்தனர்.

இருவரின் உடலிலும் வெட்டுக்காயம் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

mumbaicouple

இதுகுறித்து வேதனையுடன் கருத்து பதிவிட்ட பாலாஜியின் தந்தை, “எனது மகளும் மருமகளும் இறந்தது வியாழக்கிழமைதான் தகவல் கிடைத்தது.

இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஆனால் அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. 10 நாட்களுக்கு பிறகே அவர்களின் உடல்கள் இந்தியா வரும்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். என் மருமகள் இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று மருமகளை அழைத்துவர திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் அவர்கள் மரணத்துக்கு என்ன காரணம் எனொஅது புரியவில்லை. தற்போது தனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறார்” என தெரிவித்தார்.