பனியால் உறைந்துபோன டெக்சாஸ் பேரிடர் மாகாணமாக அறிவிப்பு!

freeze

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பனிப்பொழிவை பெரும் பேரழிவு என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்து போகியுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த வெப்பநிலை பதிவாகி கடுங்குளிர் வாட்டிவதைத்து வருகிறது.

கடந்த ஒருவாரமாக மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வணிக நிறுவனங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் தொழில்களும் முடங்கியுள்ளன.

உறைபனி காரணமாக குடிநீர் குழாய்கள் உறைந்துவிட்டன. சில இடங்களில் உறைந்த குழாய்கள் வெடித்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திவருகின்றனர்.

Image result for Joe Biden approves Texas disaster declaration following deadly freeze

சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீர் பிரச்னையில் சிக்கித்தவித்துவருகின்றன.

டெக்சாஸ் மாகாணம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாகாணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன மேலும் ஜோ பைடன் டெக்சாஸ்க்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

டெக்சாசில் பனிப்புயலில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

வரலாறு காணாத பனிப்புயலால் வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் பனிக்குள் புதைந்து கிடக்கின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்களுக்கும் கடுங்குளிர் வேதனையை அளித்துள்ளது, மீன்களெல்லாம் உறைபனியில் இறந்துபோகும் அவலமும் நிகழ்ந்துள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாகவே டெக்சாஸில் இவ்வளவு பனி கொட்டிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆர்டிக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததும் பனிப்பொழிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு அங்கு பனிப்பொழிவு நீடிக்கும் என சொல்லப்படுகிறது.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த டெக்சாஸ்க்கு தற்போது பனிப்பொழிவு மேலும் துக்கத்தை கொடுத்துள்ளது.