அமெரிக்க அதிபரின் டிஜிட்டல் குழுவில் இந்திய பெண்!

Aisha Shah

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் பைடனின் டிஜிட்டல் குழுவில் காஷ்மீரை சேர்ந்த இளம்பெண் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்தார். அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள்.

Aisha Shah Archives ~ Vaartha

அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகையின் மிகவும் அதிகார மிக்க பதவியான பட்ஜெட் துறை தலைவராக இந்திய வம்சாவளியினரான நீரா தாண்டனுக்கு பைடன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் டிஜிட்டல் குழு மூத்த பதவியில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஆயிஷா ஷா என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அக்குழுவின் தலைவராக பிளாஹெர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாககொண்ட ஆயிஷா ஷா, தற்போது அமெரிக்காவின் லூசியானாவில் வசித்து வருகிறார். ஆயிஷா அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோரின் பிரசாரத்தின் போது டிஜிட்டல் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஸ்மித்சோனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆயிஷா, முன்னதாக ஜான் எப் கென்னடி நிறுவனத்தில் கார்ப்பரேட் பண்ட்டில் உதவி மேலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: தடுப்பூசி போட்ட செவிலியர் திடீரென மயங்கிவிழுந்தார்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter