மாடர்னா கொரோனா தடுப்பூசி 100% பலன்! விலை எவ்வளவு தெரியுமா?

Vaccine

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து 100% பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

ஒருபுறம் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், எம்.ஆர்.என்.ஏ-1237 என்ற கொரோனா தடுப்பு மருந்தை தன்னார்வலர்களிடம் பரிசோதனை செய்தது.

(Photo: Reuters)

அமெரிக்காவில் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா 30 ஆயிரம் பேருக்கு சோதனை ஓட்டமாக செலுத்தப்பட்டது. இதில் 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது. இந்த மருந்துக்கு அனுமதிளிக்கப்படும் பட்சத்தில் மாடர்னாவின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 1500 ரூபாய் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த மாடனா தடுப்பூசியை 20 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் மட்டுமே கொண்ட குழு! பைடன் அதிரடி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter