தான் பெற்ற குழந்தைகள் மூன்று பேரை கொலை செய்துவிட்டு தப்பியோடி தாயை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இரவு பணியை முடித்துவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மூதாட்டி, தனது மூன்று பேரக்குழந்தைகளும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் குழந்தைகளுடன் இருந்த தாய் லிலியானா காரில்லோ காணாமல் போயிருப்பதை கண்டு அவரை தீவிரமாக தேட முயற்சித்தனர். காரில்லோ, தனது இரண்டு பையன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் ஆகிய 3 பேரை கொன்றுவிட்டு, தனது காரில் தப்பி சென்றது அம்பலமானது.
காரில்லோவுக்கு ஏற்கனவே மனநல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவரான எரிக்கின் உறவினர் டெரி மில்லர், காரில்லோவை விட்டு பிரிந்துவாழ்வதாக கூறப்படுகிறது.
இருப்பினும் எரிக் எப்படியாவது குழந்தைகளை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள படாத பாடு பட்டிருக்கிறார்.
ஆனால் சரியான நேரத்துக்கு அரசு குழந்தைகளை எரிக்கிடம் ஒப்படைக்காததால் மூன்று குழந்தைகளும் இன்று பலியாகின.
பெற்ற தாயே தனது 3 குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.