புளோரிடாவை அச்சுறுத்தும் “ஐசாயாஸ்” புயல்!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புயல் தாக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

“ஐசாயாஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள அதி திவீர புயல் வலுவிழந்து புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், ஆபத்தான இடங்களில் வசிப்பவர்கள் அரசின் முகாம்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

storm

கனமழை பெய்து வரும் நிலையில், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை ஓரமாக புயல் நகர்ந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தென் கலிபோர்னியா, வட கலிபோர்னியா, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளை இப்புயல் தாக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புளோரிடாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டுத்தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதேபோல் அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூலை 25 ஆம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் ஹெனா என்ற புயல் சூறாவளியாக வலுப்பெற்று அச்சுறுத்தியது. கடந்த இரு மாதங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மூன்றாவது புயல் “ஐசாயாஸ்” என்பது குறிப்பிடதக்கது. ஒரு புறம் கொரோனா மறுபுறம் இயற்கை பேரிடர்கள் என அமெரிக்க மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: வயது முதிர்வால் அவதிப்பட்ட இரு சிங்கங்கள் கருணைக்கொலை!