ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நீக்கியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருந்தது.
அந்த சூழலில் தான் அமெரிக்காவின் பெல்ஜியத்தில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
பைசர், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் போட வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் தடுப்பூசியை ஒரே டோஸ் போட்டுக்கொண்டால் போதும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 முதல் 48 வயதிலான ஆறு பெண்களுக்கு ரத்தம் உறைந்து இரத்தக்கட்டிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அந்த தடுப்பூசி பயன்பட்டை நிறுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும், அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களும் தடுப்பூசி முகாம்களுக்கு அறிவுறுத்தியுள்ளன
தற்போது, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நீக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை செலுத்துவதால் ரத்தம் உறையும் பிரச்னை ஏற்படுவது மிகவும் குறைவு என்றும், 80 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 15 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய மருத்துவ முகமை தெரிவித்துள்ளது.