டிக்டாக் விவகாரம்: ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Tiktok

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேர வீடியோ மூலம், திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக், அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் திருடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை 90 நாட்களுக்குள் விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிற்கு அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

ஆனால் டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திடம் டிக்டாக்கை விற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதால் அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட தடையில்லை என ட்ரம்ப் கூறினார். ஆனால் அந்நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன.

இதனால் அதிபர் ட்ரம்ப் நவம்பர் 12 ஆம் தேதிக்கு பின்னர் டிக்டாக் செயலி ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்றும், முன்பு பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களுக்கும் வேலை செய்யாமல் போகலாம் என்றும் அறிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக டிக்டாக் நிறுவனம் வாஷிங்டன் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதி கார்ல் நிகோலஸ், அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். அமெரிக்க நிறுவனங்களுக்கு டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி கார்ல் நிகோலஸ் அறிவுறுத்தினார்.

இதையும் படிக்கலாமே: 10 ஆண்டுகளாக வருமானவரி கட்டாத அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter