பார்ட்டியில் பற்றி எரிந்த மதுபானம்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Fireball

அமெரிக்காவில் நடைபெற்ற பார்ட்டியில் மதுபானம் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி மரிசா டேனியல் என்பவர், தன் தோழிகளுடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அனைத்து பெண்களும் சுற்றுலாவின் கடைசி நாளை பார்ட்டி வைத்து கொண்டாட முடிவு செய்தனர்.

அதனையடுத்து மதுபான விடுதிக்கு சென்று மது அருந்தும்போது, ஒரு பெண் தீப்பற்றி எரியும் மதுபானம் ஒன்றை அருந்த விரும்பியுள்ளார். அதனால் பார் ஊழியர், அந்த பெண்ணுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட மதுபானத்தில் தீவைத்தார். மதுபானத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஊற்ற முயன்றுள்ளார் மதுபான பார் ஊழியர். அப்போது அந்த மதுபான பாட்டிலின் மூடி கழன்று, மதுபானம் வேகமாக அதிகமாக கொட்டியது. அந்த நேரத்தில், தன் தோழியின் தொடையில் சிறிது மதுபானம் சிந்தி தீப்பிடித்தது. அதனை மாரிசா அணைக்க முயன்றபோது, அவர் மீது தீப்பற்றியது.

அதில், மாரிசாவின் முகம், இடது காது மற்றும் இடது கை போன்றவை வெந்து போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாரிசாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பெண்களின் விபரீத ஆசையும், மதுபான பார் ஊழியரின் கவனக்குறைவுமே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் மதுபான பார் மீது இழப்பீடு கோரி மாரிசா வழக்கு தொடரவுள்ளார்.