அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தெகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள்.
இவர்களின் வாக்குகளை கவர குடியரசு மற்றும் ஜனநாய கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக படகுகள் அணிவகுப்பு நடந்தது.
ஆஸ்டின் நகரில் உள்ள டிராவிஸ் ஏரியில் நடைபெற்ற இந்த படகு அணிவகுப்பில் நூற்றுக்கணக்கான படகுகளும் 2,600க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 4 படகுகள் ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஒரே நேரத்தில் எல்லா படகுகளும் விரைவாக புறப்பட்டதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க தேர்தலில் சதி செய்ய சீனா திட்டம்: வெள்ளை மாளிகை
FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter
–https://twitter.com/tamilmicsetusa