குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்!

Son

அமெரிக்காவில் இளம்வயது தாயார் ஒருவர், தனது 10 வயது மகனை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே அருகே உள்ள குடியிருப்பிலிருந்து போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர்கள், தங்கள் பக்கத்து வீட்டு வாசல் படியில், கெய்ட்லின் ஹிக்கின்ஸ் என்ற 28 வயது பெண் கையில் ஒரு துப்பாக்கியுடன் அச்சுறுத்தும் வகையில் உட்கார்ந்திருப்பதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அப்பெண்ணை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Mom

வீட்டு வாசலில் இருந்து கார் வரை ரத்தம் கசிந்து இருந்ததை பார்த்த போலீசார், காரின் டிக்கியை திறந்து பார்த்துபோது அதில் அந்த பெண்ணில் 10 வயது மகனின் சடலம் இருந்தது.

விசாரணையில் அந்த பெண் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

முதலில் மகனின் நாக்கை அறுக்க முயற்சித்ததாகவும், ஆனால் அது முடியாததால், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹிக்கின்ஸ்க்கு 2 வயதில் மற்றொரு குழந்தை உள்ளது. ஆனால் அந்த குழந்தை, அவரது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹக்கின்ஸ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.