இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு முக்கியம்- கமலா ஹாரிஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

Kamala harris

ஒரு படி மேலே போன ஆஸ்திரேலியா, இந்தியாவிலிருந்து வருவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், “இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது.

அமெரிக்கா தொற்றால் அவதிபட்ட காலத்தில் இந்தியா உதவியது. தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு இக்கட்டான சூழலில் உதவுவதில் அமெரிக்கா உறுதியாகவுள்ளது. இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது” என தெரிவித்தார்.